Skip to main content

வாழ்த்துகள் பத்மஶ்ரீ ஜெயமோகன்!





ஜெயமோகனுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தி. வழங்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வெகு சில சமயங்களில் மட்டுமே சரியான நபர்களுக்கு சரியான விருதுகள் வழங்கப்படுகின்றன.  இது இந்திய விருதுகளுக்கு மட்டுமல்ல, உலக விருதுகள் பலவற்றிற்கும் பொருந்தும்.

எனது கணிப்பின் படி, ஜெயமோகன், இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் பெற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர்.  மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்.  நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அத்தியாயத்தை அடையாளப்படுத்துகிறவர்.  அவருடைய எழுத்து முறையும், உழைப்பும் ஏராளமான இளைய எழுத்தாளர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன்.  சாகித்ய அகாடமி விருது அவருக்கு ஏன் இது வரையில் அறிவிக்கப்படவில்லை என்பது கூட எனது கேள்விகளில் ஒன்று.  எனவே பத்மஶ்ரீ வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை.

ஆனாலும்

இந்த விருதை தன் மேலே போர்த்திக் கொள்வதில் ஜெயமோகனுக்கு ஒரு சங்கடம் இருப்பதாக அவர் கற்பனை செய்கிறார்.  இந்தக் கற்பனை அதீதமானது என்பது அவருக்கே கூட ஒரு ஓரத்தில் விளங்கும்.  விருதுகள் கருத்தியல் நிலைப்பாட்டிற்காக வழங்கப்படுவதில்லை என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன?  இந்தியா மாதிரியான, அங்கீகரிக்கப்பட்ட கலைக் கோட்பாடுகளோ, கொள்கைகளோ இல்லாத தேசங்களில் விருது வழங்குவதென்பது ஒரு அங்கீகாரம், சில சலுகைகள், பல்வேறு அனுகூலங்கள்அவ்வளவு தான்.  இதை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு அப்படியென்னவொரு கற்பனையான அசூயை என்று எனக்கு விளங்கவில்லை.

யோசித்துப் பார்த்தால், விருதுகளின் மீதான ‘சீச்சீய் இந்தப் பழம் புளிக்கும்..’ என்ற சுந்தரராமசாமி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்றே எனக்குத் தோன்றுகிறது.  என்னைக் கேட்டால் அது ஒரு பொருட்படுத்தத்தக்க கூச்சமே இல்லை என்று தான் சொல்வேன்.  இது ‘அரசாங்க விருதுகளின் மீதான ஒவ்வாமை’ அவ்வளவு மட்டுமே.

தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் கலைஞனுக்கு இது போன்ற விருதுகள் கிடைப்பது அபூர்வம்.  அந்த வகையில் ஜெயமோகன் இவ்விருதை பெற்றிருப்பதில் எனக்கெல்லாம் மகிழ்ச்சி தான்.

வாழ்த்துகள் ‘பத்மஶ்ரீ ஜெயமோகன்’!


Comments

Anonymous said…
ஜெயமோகன் நடிக்கும் நாடகத்தை தெரியாதது போலவே வாழ்த்து சொல்ல உங்களால் எப்படி முடிகிறது?

- செல்வா ஜாண்
Anonymous said…
அவர் மிகப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறார். தனது கெளரவத்தையும் இழந்து விடாமல், விருது வழங்கிய தேச்த்தையும் காயப்படுத்தி விடாமல், இப்படியொரு நடவடிக்கையை அவரைத் தவிர வேறு யார் செய்ய முடியும்? வெண்முரசுவின் வருகை இந்திய இலக்கிய உலகையே மாற்றியமைக்கப் போகிறது என்பது தான் எங்களைப் போன்றோரின் ஆவல். என் மாதிரியான மிக சாதாரண ரசிகர்களுக்காகவும் அவர் எழுதுகிறார் என்பதெ பெரிய விஷயம் தான். சங்கரசுப்பிரமணியன், ஆழ்வார் திருநகரி

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக