Skip to main content

யாராவது இருக்குறீர்களா?



மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில், நாட்டுப்புறவியல் முதுகலைப் (M. A. in Folklore) பாடப்பிரிவிற்கான 2015-16ம் வருட மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.



நாட்டுப்புறவியலில் முதுகலை என்ற பாடத்திட்டம் 1987ம் வருடம் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கப்பட்ட போது தமிழ் நாட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம்.  இப்படியும் ஒரு படிப்பா?
ஏராளமான கேள்விகள், கிண்டல்கள், பொறாமை, ஏச்சுகள் - எல்லாமே அதீத வகை தான்!

·         ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் நாட்டுப்புறவியலை முன்னிறுத்துவதில் 'பன்னாட்டு அரசியல்' இருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவர்கள்...
·         அதையே இன்னொரு தொனியில் 'அய்யய்யோ கிறிஸ்தவ நிறுவனத்திற்குள் பேய்களும் பிசாசுகளுமா?' என்று கூக்குரல் எழுப்பும், கழுத்தில் சிலுவை அணிந்த கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்...
·         'இது எங்க ஏரியா உள்ள வராதே..' என்று மார்தட்டிய நாவாவினர்...
·         அதனாலேயே உள்ளே வர சங்கடப்பட்டு ரொம்ப வருடங்களுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருந்த கலை இரவினர்...
·         இதற்கெல்லாம் உச்சம் போல, 'என்னது? திராவிட நாட்டில் மூடநம்பிக்கைகளைப் படிப்பதற்கு ஒரு துறையா?  அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலா?' என்று கேட்டு வழக்கம் போல தங்களது அறியாமையை வீரத்தோடு முழங்கிய கழகக் கண்மணிகள்...

இப்படி எல்லாவற்றையும் கடந்து நடைபெற்றுவரும் நாட்டுப்புறவியல், 1992 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் தனித் துறையாக செயல்படத் தொடங்கியது.  இலக்கியத் துறைகளிலிருந்தே நாட்டுப்புறவியல் உருவானது (...என்றாலும் இலக்கியத்துறைகளின் கட்டுப்பெட்டித் தனத்திலிருந்து தன்னை விலக்கியே வைத்திருந்தது); அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியத் துறைகள் (எனக்குத் தெரிந்து, ஆங்கில இலக்கியம் பயின்று நாட்டுப்புறவியலுக்குள் வந்து சேர்ந்தவர்  M. D. Muthukumaraswamy  மட்டுமே!).

நாட்டுப்புறவியல் முதுகலைப் பாடத்திட்டம் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு முன்மாதிரி பாடத்திட்டம் தான்.  அனைத்து அறிவுப் புலங்களின் நவீனப் பார்வைகளையும் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் அது வடிவமைக்கப்பட்டிருந்தது.  (என்னவொரு முரண்!  மரபையும் பழமையையும் கையாளும் நாட்டுப்புறவியல் தான் அதி நவீன முறையியல்களை ஆய்வு உபகரணங்களாகக் கொண்டிருந்தது). ஒரு சின்ன உதாரணமாக, நவீன மொழியியல் 'குறியியல்' என்று முளைத்த போது, மொழியியல் துறைகள் அள்ளவோ கோர்க்கவோ என்று குழம்பிய போது, நாட்டுப்புறவியல் பாடத்திட்டம் அதனை 'அமைப்பியல்வாதமும் குறியியலும்' என்று தனக்குள் செரித்துக் கொண்டது.  இந்த வகையில், முதுகலை நாட்டுப்புறவியல் என்பது இலக்கியம், மொழியியல், மானிடவியல், உளவியல், தத்துவம், சமயம், சமூகவியல், அரசியலியல், தொடர்பியல் போன்ற பிற துறைகளின் இணைப்பாக உருவான உயர் அறிவியல்.
 
இது தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதுகலை நாட்டுப்புறவியலுக்கான பாடத்திட்டம்:

1.     நாட்டுப்புறவியல் அறிமுகம்      (Introduction to Folkloristics)
2.     கள ஆய்வும் ஆவணப்படுத்தலும்  (Field Methods and        Documentation Techniques)
3.     பண்பாட்டு மானிடவியல்    (Cultural Anthropology)
4.     இந்திய சமூக ஒழுங்கமைப்பு     (Indian Social System)
5.     இனவரைவியலும் பண்பாட்டை எழுதுதலும்                  (Ethnography and Writing Culture)
6.     இனக்குழு கவிதையியல்    (Ethno Poetics)
7.     நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் I (Folklore Theories I)      
8.                தொடர்பியல் கோட்பாடுகள்  (Theories of Communication)
9.     கதையாடலியல் (Narratology)
10.    மின் ஆவணப்படுத்தலும் புதிய அருங்காட்சியியலும்           (Digital Archiving and New Museology)   
11.    இனவரைவியல் ஆவணப்பட உருவாக்கம்                                                 (Ethnographic Film making)
12.    வழக்காறுகளும் தேசியவாதமும்      (Nationalism and Folklore)
13.    நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் - II (Folklore Theories II )
14.             நாட்டுப்புற சமயமும் சடங்குகளும்     (Folk Religion and Ritual)
15.    பண்பாட்டுச் சின்னங்கள்     (Tangible Cultural Heritage)
16.    அமைப்பியல்வாதமும் குறியியலும்     (Structuralism and         Semiotics)
17.    நிகழ்த்துதல் ஆய்வுகள் (Performance Studies)
18.    தமிழ் நாட்டுப்புற அரங்கக் கலைகள் (Tamil Folk Theater)
19.    பயன்பாட்டு நாட்டுப்புறவியல்     (Applied Folklore)
20.    வாய்மொழி மரபும் வரலாற்றுருவாக்கமும் (Oral Tradition         and Historiography)
21.    மரபான அறிவுத் தொகுதிகள் (Indigenous Knowledge System)
22.    நவீனச் சூழலில் வழக்காறுகள்    (Folklore in the Changing         World)
23.    மெய் நிகர் நாட்டுப்புறவியல் (Virtual Folklore)

·                இரண்டு வருட முதுகலைப் பாடத்திட்டம் இது.

·                எந்தவொரு பாடப்பிரிவில் இளங்கலை     பயின்றவர்களும் முதுகலையில் சேரமுடியும்     (நானே இளங்கலையில் வேதியியல் தான் படித்தேன்).

·                இலக்கிய வாசனையும், சிற்றிதழ் அறிமுகமும் இருந்து பண்பாடு குறித்து ஒரு ஓரமாய் அக்கறையும் இருக்கிறவர்கள் இந்த முதுகலையைக் கற்க வரலாம்.

·                இதைப் படித்தால் அங்கே வேலைக்குப் போகலாம், இங்கே வேலைக்குப் போகலாம் என்று சொல்வதற்கு வழியில்லை.  ரொம்பவும் சொற்பமான அரசுப் பணிகள் மட்டுமே உள்ளன. (அதுவும் மத்திய அரசுப் பணி தான், மாநில அரசில் பண்பாட்டு விஷயங்களை பக்தியும் இலக்கியமும் கவனித்துக் கொள்கின்றன). ஊடகங்களிலும், ஆய்வு மையங்களிலும், அருங்காட்சியகங்களிலும், பண்பாட்டு மையங்களிலும் முட்டி மோதுகிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது. 
 
·                ஆனால், மத்திய அரசின் (பல்கலைக்கழக மானியக்குழு) ஆய்வு நிதியுதவிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டுப்புறவியலில் எல்லோருக்கும் வாய்க்கிறது.  எனவே நாட்டுப்புறவியல் படிப்பதால் உயிருக்கெல்லாம் ஆபத்தில்லை!

·                ஆடுகிறவர் - பாடுகிறவர் பின்னால் திரிய வேண்டி வரும்; கிராமப்புறங்களில் ஆட்களற்ற பகல்களில் நிழல் போல காத்திருக்க வேண்டி வரும்; 'பெரிசுகள்' சொல்லும் கதைகளையெல்லாம் உம்...உம்...கொட்டி பொறுமையாய் கேட்க வேண்டியிருக்கும்; விடிய விடிய தெருக்கூத்தைப் பார்க்க வேண்டி வரும்; கருப்பசாமி பற்றி யாரிடம், என்ன கேட்டாலும் சுற்று வட்டாரத்தில் இருக்கிற அனைவருக்கும் சாமி வந்து விடுகிற அனுபவங்கள் கிடைக்கும்.  இதையெல்லாம் கடந்து வந்த பின்பு, 'ஏன் இப்படி?' என்றொரு கேள்வி வரும் பாருங்கள், அது தான் நாட்டுப்புறவியலின் மாயச்சுழற்பாதை!

இந்தச் சுழலுக்குள் அகப்பட்டு, பின் வெளிப்பட விரும்புகிறவர்கள் யாராவது இருந்தால், நாட்டுப்புறவியல் முதுகலை படிக்க வரலாம்.  2015-2016ம் ஆண்டிற்கான சேர்க்கைப் படிவங்கள் இணையத்தில் கிடைக்கின்றன www.mkuniversity.org.

முதுகலை நாட்டுப்புறவியல் (M. A. Folklore) படிப்பு:
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் (தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும்) - இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் - நுழைவுத் தேர்வு போன்ற எதுவும் இல்லை - இரண்டு ஆண்டுகள் படிப்பு.
அனுமதிக்கப்பட்ட இடங்கள்: 10
தமிழ் வழி / ஆங்கில வழி என இரு மொழி வழியாகவும் பயிலலாம். 
ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிட வசதி உண்டு.
ஆண்டுக்கட்டணம்: ரூ. 5000 - 6000 (பட்டியலினத்தவருக்கு ரூ.2500-3000) - தமிழக அரசு வழங்கும் கல்வி நிதி (பட்டியலினத்தவர் / பிற்படுத்தப்பட்டவர்) வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 27-2-2015 (படிவத்தை இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்).
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்: 1-06-2015

இளமுனைவர் நாட்டுப்புறவியல் (M. Phil. Folklore) படிப்பு:
கல்வித்தகுதி: நாட்டுப்புறவியல் / மானிடவியல் / சமூகவியல் / தமிழ் / மொழியியல் / ஆங்கிலம் / தொடர்பியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் -  நுழைவுத்தேர்வு உண்டு.
அனுமதிக்கப்பட்ட இடங்கள்: 15
தமிழ் வழி / ஆங்கில வழி என இரு மொழி வழியாகவும் பயிலலாம். 
ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிட வசதி உண்டு.
ஆண்டுக்கட்டணம்: ரூ. 5000 - 6000 (பட்டியலினத்தவருக்கு ரூ.2500-3000) - தமிழக அரசு வழங்கும் கல்வி நிதி (பட்டியலினத்தவர் / பிற்படுத்தப்பட்டவர்) வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 27-2-2015 (படிவத்தை இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்).
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்: 1-06-2015



மேலதிக விபரங்களுக்கு இவர்களையும் தொடர்பு கொள்ளலாம்:
டி. தருமராஜ் (நான் தான்!)    9443554807
தி. கோபிநாத், உதவிப் பேராசிரியர்    9443113539
அ. கலையரசி, உதவிப் பேராசிரியர்   9698034145
ச. ஜஸ்டின் செல்வராஜ், உதவிப் பேராசிரியர்    8903228285   

Comments

Anonymous said…
மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி (எழுத்துத்தேர்வு, நேர்காணல், குழுவிவாதம்...)? எத்தனை சீட்கள் உள்ளன? மீடியம் (தமிழா, ஆங்கிலமா, தமிழ் தெரிந்திருப்பது கட்டாயமா)? சுமாராகக் கட்டணம் & உபகாரச்சம்பளம் ஏதாவது இருக்கிறதா? இவற்றை மிகச் சுருக்கமாக, ஓரிரு வார்த்தைகளிலாவது குறிப்பிடுங்களேன்..
நன்றி! தகவல் இணைக்கப்பட்டிருக்கிறது.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக