போலச்செய்தல் என்ற புனைவும் திரும்பச்செய்தல் என்ற யதார்த்தமும் ‘ போலச்செய்தல் ’ , தனக்குள் நாடகத்தன்மையைக் கொண்டவொரு நிகழ்த்துதல் கூறு . அதன் உள்ளார்ந்த உணர்வு பகடி . யதார்த்தத்தைப் பகடி செய்வது மட்டுமே தங்களது நோக்கம் என்பதை , ‘ போலச்செய்யத் ’ தொடங்கும் நிகழ்த்துநர்கள் தெளிவாகச் சொல்லிய பின்பே நிகழ்த்துதல்கள் அரங்கேறுகின்றன . இத்தகைய ‘ போலச்செய்யும் ’ நிகழ்வுகளில் வெளிப்படும் அங்கதம் , யதார்த்தத்தின் மீதான விமர்சனமாகக் கருதப்படுகிறது . யதார்த்த பண்பாட்டு வெளியிலிருந்து துல்லியமாக வேறுபடுத்தப்பட்ட , புனைவுவெளியில் நிகழ்த்தப்படும் ‘ போலச்செய்தல்களை ’ அனைத்து சமூகங்களும் அங்கீகரிக்கின்றன என்பதோடு , அந்நிகழ்வுகளை நடத்தும் கலைஞர்களை புரக்கவும் செய்கின்றன . போலச்செய்தலின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக, தெருக்கூத்தின் கட்டியக்காரனையும், ராஜா ராணி ஆட்டத்தின் பபூனையும், தோற்பாவைக்கூத்தின் உச்சிக்குடுமி – உளுவத்தலையன் கதாபாத்திரங்களையும் குறிப்பிடவேண்டும். அதிகார ம் ததும்பும் கதாபாத்திரங்களை, யதார்த்தத்தில் கேட்க முடியாத அத்தனைக் கேள்விகளையும் நகைச்சுவை என்ற பெயரில்